புத்தளம் – முந்தல் பிரதேசத்தில் ரயில் மோதி யாசகர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து இன்று மாலை கொழும்பு நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த யாசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தலுக்கும் – மங்கள எளிய பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த யாசகர், ரயில் பாதைக்கு அருகே நின்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்த குறித்த யாசகரின் சடலம் , ரயில் ஊழியர்களால் முந்தல் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யாசகர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்