
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ளதால், அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சுகளின் நியமனம் இடம்பெறவுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்பதற்கு தயார் நிலையிலேயே இருக்குமாறு ஏற்கனவே இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
35 முதல் 40 பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
வியாழேந்திரன், அரவிந்தகுமார், சுரேன் ராகவன் ஆகியோர் இராஜாங்க அமைச்சு பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழ் உறுப்பினர்களாவர் என தெரியவருகின்றது.
இராஜாங்க அமைச்சர்களின் நியமனத்தின் பின்னரே, நிலையான அமைச்சரவை நியமனம் இடம்பெறவுள்ளது.
பிற செய்திகள்