பாண் விலையில் மீண்டும் மாற்றம்!

பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் இன்று அறிவித்துள்ளது.

சந்தையில் கோதுமைமாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, பாணின் விலையை 300 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வர்த்தகத்துறை அமைச்சருக்கும், பேக்கரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

” கோதுமைமா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். சாதாரண விலையும் நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டது. எனவே, பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது.” – என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *