
ஜெனீவா, செப் 7
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இலங்கைப் பிரதிநிதிகள் குழு ஜெனிவாவை சென்றடைந்துள்ளது.
நீதி அமைச்சர் பேராசிரியர் விஜேதாஸ ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட நால்வர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்