நாட்டைக் மீட்பதற்கான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி கோரிக்கை

முதலாவது போராட்டம் முடிவடைந்தாலும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டம் தொடரும் என ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க தெரிவித்தார்.

நேற்று இடமபெற்ற ஐ.தே.க.வின் 76 ஆவது மாநாட்டில் பேசிய அவர், தமிழ் கூட்டமைப்பு, ஐ.தே.க, ஜே.வி.பி, என அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நவீன அரசியல் மாற்றத்தைக் கோரிய இளைஞர் யுவதிகளின் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்துள்ளது ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவடையவில்லை என சுட்டிக்காட்டினார்.

இளைஞர் யுவதிகள் அதமது இயலுமையையும் பலத்தையும் காண்பித்துள்ள நிலையில் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தாம் முன்னின்று செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் உண்மைக்கான ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மக்கள் சபையை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் கூறினார்.

இம்முறை பெரும்போகத்திற்கு தேவையான உரம், எரிபொருள், கிருமி நாசினி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *