பாணின் விலை மேலும் குறையும்-வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் உறுதி!

யாழ் மாவட்ட வெதுப்பாக உரிமையாளர்களுடன் சந்திப்பு யாழ் மாவட்ட செலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன்,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்றுஇடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்ததாவது ;

இலங்கை மக்களுக்கு பாணினை ரூபா 200 /-க்கு கொடுத்த பெருமை என்னைச் சேருகின்றது என்பதில் நான் திருப்தி அடைகின்றேன். இவ்வாறு பாணின் விலையினை ரூபா 200 /-க்கு கொண்டு வந்ததற்குப் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்கள் . இன்னும் விலையினை குறைப்பதற்காக ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து நடவடிக்கை எடுப்பேன்.

சில வெதுப்பக உரிமையாளர்கள் பாதித்தால் , 12 ஆயிரத்து 500 தரும் மாவினை வைத்துக்கொண்டு உற்பத்தி செய்துகொள்ளுங்கள்.ஆனால் பிறீமா மாவினை துஸ்பிரயோகம் செய்யாதீர்கள். இவ்வாறு துஸ்பிரயோகம் செய்வது என்பது ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதுக்குரியதாகும்.

நல்லது செய்கின்ற எனக்கும் மாவின் அளவினை குறைக்க சொல்லி பிறீமா மாவின் விற்பனை முகாமையாளர் அழுத்தம் கொடுத்துள்ளார்.இது கவலையினை அளிக்கிறது.

எனக்கு இதனால் பாராட்டுகளும் வருகின்றன .அத்துடன் அச்சுறுத்தல்களும் வருகின்றன. எனது உயிரினை பணையம் வைத்து தான் இதை செய்கிறேன்.ஊடகத்திற்கு அறிக்கை விட்டதனால் தான் இன்று பாண் விலை குறைந்ததனை மக்கள் அறிகிறார்கள் .ஊடகம் என்பது எமது உயிர் நாடி.

மா எனக்கு தர வில்லை எனவும் கவலைப்படவும் இல்லை அதற்காக பாணின் விலையினை நான் கூட்டவுமில்லை. ஒருங்கலத்தில் வளர்ச்சியான திட்டங்களையே செயற்படுத்துவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *