வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு!

2021ம் ஆண்டு உயர்தரம் பரீட்சை எழுதி பாடசாலை வரலாற்றில் வர்த்தக பிரிவில் முதல் முறையாக பல்கலை கழகம் செல்லும் மாணவியான கே.துஷ்யந்தி மற்றும் கலைப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 5ம் நிலையில் வந்த ஜே.ஜானுஷா ஆகிய இரு மாணவிகளையும் கெளரவிக்கும் வகையில் பாடசாலை அபிவிருத்தி குழுவினரால் இன்று(07) காலை 7.30 மணியளவில் பாடசாலை முற்றத்தில் வைபவம் ஆரம்பிக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்கள் கலந்துகொண்டிருந்தார் மேலும் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் முன்னால் அதிபர் சி.வையாபுரிநாதன் அவர்களும் பாடசாலைக்கான வலய இணைப்பாளரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தியிருந்தனர்.

மேலும் பல்கலைகழகம் செல்லும் இரண்டு மாணவிகளுக்கும் நினைவு பரிசில்களும் கேடயமும் பதக்கமும் அணிந்து கெளரவிக்கப்பட்டனர்,அதேவேளை குறித்த மாணவிகளுக்கு கற்பித்த ஆசிரியகள் மற்றும் அதிபர், பிரதி அதிபர் ஆகியோருக்கும் மாணவர்களால் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து பாடசாலையின் முன்னால் அதிபர் சி.வையாபுரிநாதன் அவர்களினால் மாணவிகளுக்கு அன்பளிப்பு வழங்கிவைக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து ஆசிரியர்களும் அன்பளிப்புகளை மாணவிகளுக்கு வழங்கி வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *