
2020 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகரசபையில் இருந்த தீயணைப்பு வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தினைச் சந்தித்திருந்தது.
அதனை திருத்த முடியாத நிலையில் இருந்ததன் காரணமாக யாழ்,வர்த்தக சங்கம் இதற்கான அரசாங்கத்திடம் தற்காலிகமாக தீயணைப்பு வாகனத்தினை தருமாறு கோரிக்கையினை விடுத்திருந்தோம்.
ஆனால் இன்றுவரை அதற்கான எந்தவிதமான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.யாழ்ப்பாண நகர தேவை கருதி எங்களுக்கு அவரசமாக ஒரு தீயணைப்பு வாகனம் தேவை என்பதனை கருத்திற்கொண்டு யப்பானில் இருந்து ,புனர்நிர்மாணம் செய்யப்பட்ட தீயணைப்பு வாகனத்தினை கொள்வனவு செய்து நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்.
இதனை இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் யாழ்.மாநகரசபை முதல்வர்,ஆணையாளர்,வட மாகாண பிரதேச செயலாளர் ,அரசாங்க அதிபர்,உள்ளுராட்சி ஆணையாளர், யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் முன்னிலையில் யாழ்.மாநகரசபையிடம் ஒப்படைக்க உள்ளோம்.
வர்த்த சங்கம் இந்த முயற்சியினை எடுத்துக்கொண்டிருந்த பொழுது நொர்தேன் மத்திய வைத்தியசாலை உரிமையாளர் எஸ்.பி சாமி மற்றும் அவருடைய மகன் Dr. கேசவராஜா ஆகிய இருவரும் தாங்களே முற்றுமுழுதாக செலவினை கொடுத்து யாழ்,மாநகரசபைக்கு வழங்குவதற்காக ஆயத்த இருக்கிறோம் என உறுதிமொழி தந்திருக்கிறார்கள்.இதற்கமைய இன்னும் 1 வாரத்திற்குள் கையளிக்க உள்ளார்.என்றார்.
பிற செய்திகள்