திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தை செலுத்திய வேனுடன் மோதி இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது.
தந்தை வேனை பின்னால் எடுத்த போது சிறுவன் வேனுக்குள் சிக்குண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்