ஜோன்ஸ்டனின் சொத்துக்களை சேதப்படுத்திய இருவர் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் சொத்துக்களை தாக்கி சேதப்படுத்தி சொத்துக்களை அபகரித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

ஹோகந்தர பிரதேசத்தில் வசிக்கும் 22 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் உடமைகளுக்கு சேதம் விளைவித்த மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத உயன பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

47 வயதான சந்தேக நபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *