திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகர்களுக்கான அனர்த்த நடவடிக்கைகளின் போதான அதன் செயற்பாடுகளை செயற்திறனாக்குதல் தொடர்பான செயலமர்வு திருகோணமலையில் இடம் பெற்றது.
இந்நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த செயலமர்வானது திருகோணமலை ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம் பெற்றது.
மேலும், நாடளாவியரீதியில் அதிகரித்துச் செல்லும் அனர்த்த அபாயங்களை செயற்திறனுடன் கையாள்வதன் மூலம் பொது மக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது அனர்த்த முகாமைத்துவத்தின் பொறுப்பாகும் .
பொது மக்களுக்காக அனர்த்த நிலைமையின் போது தகவல்களை வழங்கி எவ்வாறு செயற்படுவது தொடர்பிலும் இதன் போது தெளிவூட்டப்பட்டது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம கலந்து சிறப்பித்தார்.
குறிப்பாக, இதில் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ், அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பிரிவின் பணிப்பாளர் சுகத் திசநாயக்க, வேர்ல்ட் விசன் முகாமையாளர் ரவீந்திரன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி டுலாரி பெர்னாந்து ,நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பிரதேச ஊடகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பிற செய்திகள்