இன்று இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இந்த இராஜாங்க அமைச்சர்கள் தேவைதானா என்று கேட்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய அவர்,
இவ்வாறு கேட்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பதவியேற்ற இராஜங்க அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் விசேடமாக வழங்கப்படவில்லை.
அத்துடன் சம்பளம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.- என்றார்.
பிற செய்திகள்