புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த இலங்கை எழுத்தாளர்!

புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆறு எழுத்தாளர்களில் 47 வயதான இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவும் இடம்பிடித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவல் அறிவிக்கப்பட்டது

இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியாளராக வெளிப்பட்ட இலங்கையின் இரண்டாவது எழுத்தாளர் இவர் ஆவார்.

கடந்த ஆண்டு, அனுக் அருட்பிரகாசம், 34, A Passage North எனும் இலங்கை போருக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய நாவலுக்காக இறுதிப்பட்டியலில் இடம்பிடித்தார்.

ஷெஹான் கருணாதிலகவின் இரண்டாவது நாவலான ‘தி செவன் மூன்ஸ் ஒப் மாலி அல்மேடா’ இம்முறை புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் உள்ள மற்ற ஐந்து எழுத்தாளர்களில் மூன்று பெண்களும் இரு ஆண்களும் அடங்குகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *