இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிரான மனு குறித்து 13ஆம் திகதி விசாரணை

<!–

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிரான மனு குறித்து 13ஆம் திகதி விசாரணை – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை எதிர்வரும் 13ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்பட்டுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *