புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் சித்திரதேர் வெள்ளோட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் உலகளந்த பிள்ளையார்ஆலயம் நீண்ட வரலாற்றினை கொண்ட ஆலயத்திற்கு முதன் முதலாக சித்திரதேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்ட நிகழ்வு இன்று 08.09.2022 மாலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

01.09.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 07.09.2022 இன்று வேட்டைத்திருவிழா சிறப்புற நடைபெற்று 08.09.2022 சம்பர திருவிழா நடைபெற்று நாளை 09.09.2022 தேர்திருவிழாவும் சிறப்புற நடைபெறவுள்ளது.

வரலாற்று புகழ் கொண்ட உலகளந்த பிள்ளையார் ஆலயத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச மக்களினதும் புலம்பெயர்ந்த மக்களினதும் நிதிப்பங்களிப்புடன் புதிதாக சிற்பத்தேர் அமைக்கப்பட்டு தேரின் வெள்ளோட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த, இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் மற்றம் முன்னால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *