தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஒருங்கிணைப்பில் பிரதேச சர்வ மத குழுவினருக்கு மத சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் பன்மைத்துவம் தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலை கிரீன் கார்டன் ஹோட்டலில் இன்று (08) நடைபெற்றது.
நீடித்து நிலைத்திருக்கக்கூடிய சமாதானம், இன ஐக்கியம், சகவாழ்வு மற்றும் பன்மைத்துவம் போன்றவற்றைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு செயற்திட்டங்களையும், பயிற்சிகளையும் தேசிய சமாதான பேரவை பிரதேச மட்டங்களில் மேற்கொண்டு வருகிறது.
அவ்வாறான செயற்றிட்டங்களில் ஒன்றான மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு (ARC) எனும் இச்செயற்திட்டத்தில் சர்வ மத குழுவின் நோக்கு, அதன் இலக்கு, சமூக அங்கீகாரம், உள்ளக ஒற்றுமை, குழுச் செயற்பாடு மற்றும் பெறுபேறு தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டதுடன் பங்கு பற்றுனர்களுக்கிடையிலான குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், வளவாளராக திரு. சிசிர ஆரியவங்ச, தேசிய சமாதானப் பேரவையின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திரு. எம்.யூ. மதனி உவைஸ், திரு. விஜயகாந்த், திருமதி. ஜெனி (மொழிபெயர்ப்பாளர்), சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசனின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிக் அலாப்தீன் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், இளைஞர் மதத் தலைவர்கள், பெண்கள் அமைப்பின் இளைஞர் உறுப்பினர்கள், சமூகமட்ட செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




பிற செய்திகள்