இன்றைய நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் நிலைபேரான கல்வி அபிவிருத்தியினை நோக்கிய மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதன் பொருட்டு (2022.09.10) சர்வதேச எழுத்தறிவு நாளை முன்னிட்டு இன்று (.08) திருகோணமலை கல்வி வலய முறைசாராப் பிரிவின் ஏற்பாட்டில் வலயக்கல்விப் பணிப்பாளர் . சிவானந்தம் சிறீதரன் அவர்களது தலைமையில் குறித்த பேரணி நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வுப் பேரணியில் தி/தி/ மாதுமை அம்பாள் வித்தியாலயம், தி/தி/ செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம் மற்றும் தி/ தி/ பாரதி தமிழ் வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் அடங்கலாக ஊர்வலமும், ஒன்று கூடலும் நடைபெற்றதுடன், வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களது அறிவுறுத்தலுக்கு அமைவாக ஏனைய பாடசாலைகள் தத்தமது பகுதிகளில் குறித்த விழிப்புணர்வுப் பேரணியினை நடாத்தியிருந்ததுடன், குறித்த தருணம் எழுத்தறிவின் அவசியத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்
- சூரிய மின்சக்திக்கான கட்டணங்களில் திருத்தம்!
- புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு! – முழு விபரம்
- தமிழர்களை அமைச்சராக நியமித்து அழகு பார்த்த ரணில்!
- நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka