சமுர்த்தி சௌபாக்கியா” மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் பயனாளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதுடன், ஐந்து புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்படன.

இவ் வீட்டுத் திட்டமானது, சமுர்த்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமுர்த்தி சௌபாக்கியா” வேலைத்திட்டத்தின் ஊடாக, முந்தல் பிரதேசத்தில் வீடற்று வாழும் பயனாளிகளுக்காக புதிதாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், முந்தல் மற்றும் மங்கள எளிய சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் கீழ் கடந்த வருடம் நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகள் அதன் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இந்த வருடம் நிர்மாணிக்கப்படவுள்ள ஐந்து வீடுகளுக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டன.

முந்தல்பிரதேச செயலாளர் ரொஹான் பிரியந்த தசநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில் முந்தல் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆர்.டி.ஏ.ஐ.ஆரியரத்ன, சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் சீ.எம்.திலுக், மங்கள எளிய சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் எஸ்.எம்.நபீல், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.கிங்ஸ்லி டேவிட், முந்தல் மற்றும் மங்கள எளிய சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளின் கள உதவியாளர்களான முஹம்மது நஸ்ருல், கீர்த்தி லதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கருத்தான்வில்லுவ, கட்டைக்காடு மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளியிடம் கையளிக்கப்பட்டதுடன், உடப்பு, ஆண்டிமுனை , கட்டைக்காடு, சமீரகம மற்றும் பெருக்குவற்றான் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் இதன்போது அதிதிகளால் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *