
கொழும்பு கெசல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு 7.30 மணி தொடக்கம் 7.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சென். செபஸ்தியன் வீதி கெசல்வத்த பகுதியில் இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை மறைத்துக்கொண்டு வந்த இருவர் வீடொன்றினுள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.