
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3ஆம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.
சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 73 வயதான 3-ஆம் சார்லஸ், மறைந்த 2- ஆம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.
இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3ஆம் சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறவுள்ளது.
இவர் தனது முதலாவது மனைவியான இளவரசி டயானாவை 1996ஆம் ஆண்டில் விவகாரத்து செய்தார். 1997இல் வீதி விபத்தொன்றில் சிக்கி டயானா உயிரிழந்தார்.
அதனையடுத்து 2005ஆம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2ஆவது திருமணம் செய்தார்.
இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏறவுள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுவுள்ளார் எனவும் பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்லவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.