தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா!(படங்கள் இணைப்பு)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது…

கருவரையில் வீற்று இருக்கும் செல்வச்சந்நிதியான் வேல் பெருமானுக்கும்,விநாயகர்,மற்றும் முருகன்,வள்ளி,தெய்வானைக்கும்விஷேட அபிஷேசங்கள்,ஆராதனைகள் என்பன இடம்பெற்று  எம்பெருமான் சமேதராக வெளிவீதியுடாக தேரேரி  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ்வாலயத்தில் கடந்த 27.08 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய  வருடாந்த திருவிழாவில் இன்று இரதோற்சவமும். 10.09 அன்று தீர்த்தவோற்சவத்துடன் இனிதே திருவிழாக்கள் நிறைவடையும்…

இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தமது நேர்த்திக்கடன்களாக தூக்குக்காவடிகள்,சாதாரண காவடிகள் எடுத்தும்,கற்பூரச்சட்டிகள் எடுத்தும், அங்கப்பிரதட்சை,பஞ்சாங்க நமஸ்காரம், செய்தும் தமது  இஷ்ட சித்திகளை நிறைவேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *