
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஆதரவு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த்தளத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு இந்த ஆதரவு நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
கலைப்பீடத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்த நிலையம் திறக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.