பாடசாலை மாணவர்களால் சுவரில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியங்கள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மிறாவோடை சக்தி வித்தியாலய, பாதுகாப்பு சுவரில் மாணவர்களால் வரையப்பட்ட விழிப்புணர்வு சுவரோவியங்களை, பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தல் நிகழ்வு வைபவ ரீதியாக மாணவர்களால் இன்று (9) திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டது.

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் போன்றவற்றை பிரதேசத்தில் தடுக்கும் வகையில் இவ் விழிப்புணர்வு செயற்பாடு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேசத்தில் மாணவர்களால் அடையாளம் காணப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி இவ் ஆக்க பூர்வமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச ‘வேள்ட் விசன்’ நிறுவணத்தின் அனுசரணையில் உள நல நிலையத்தின் வழி நடத்தலில் ‘இம்பக்ட் பிளஸ’; திட்டத்தின் கீழ் பிரதேச சிறுவர்களை கொண்டு ஒருங்கமைக்கப்பட்ட குழுக்களைக் கொண்டு இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்க்பட்டு வருகிறது.

பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட விடயங்களான சமூக சீர்கேடுகள், சுகாதாரம்,கல்வி, சிறுதோட்ட பயிர் செய்கை,மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் ‘வேள்ட் விசன்’ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திருமதி பிரியா கிங்சிலி மற்றும் உள நல நிறுவணத்தின் உத்தியோகஸ்த்தர் ம.சூசைதாஸன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *