இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம் ஆகும். இந்தக் கிரீடம் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 கரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோஹினூரில் எடுக்கப்பட்ட இந்த வைரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1851-ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவுக்காக இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டது. அந்த வைரம் 1937 முதல் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கிறது.
இந்தக் கிரீடம் இங்கிலாந்தின் ராணியாக இருந்த 2-ஆம் எலிசபெத்தின் வசம் இருந்து வந்த நிலையில் அவரின் மறைவையடுத்து தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன் சார்ல்ஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சார்ல்ஸ் புதிய ராஜாவானதை தொடர்ந்து அவரது மனைவி கமிலா ராணியாகியுள்ளார். இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்லவுள்ளது