அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சதொசவில் குறைப்பு

சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசி 185 ரூபாவாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 200 ரூபாவாக விற்பனை செய்யப்படும் வெள்ளை நாடு கிலோ 194 ரூபாவாகவும் சிவப்பு பருப்பு கிலோ 135 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *