திருக்கோணேஸ்வரர் ஆலய காணி சுற்றுலா அபிவிருத்திக்கு சுவீகரிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலய பகுதியை சுற்றுலா அபிவிருத்திக்கு உள்வாங்குவதற்கு திட்டமிடப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புக்கு தொல்பொருள் திணைக்களத்தினரும் கிழக்கு மாகாண ஆளுநரும் ஆதரவளிக்கிறார் என ஆலய பரிபாலன சபையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழரின் தொன்மை நிறைந்த பாடல்பெற்ற சிறப்புத் தலமான திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான காணியை உல்லாசத்துறை அபிவிருத்தியின் பெயரால் ஆக்கிரமிக்க தொல்பொருள் திணைக்களத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  ஆலயத்துக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணி உள்ளீர்க்க திட்டமிடப்படுகிறது.

இதுதொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொல்பொருள் திணைக்களத்தினரும், கிழக்கு மாகாண ஆளுநரும் ஆதரவை வழங்குகிறார்.

எனவே திருக்கோணேஸ்வர ஆலயத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்துத் தமிழ் மக்களும், இந்து  மக்களும் குரல்கொடுக்க வேண்டும் – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *