வவுனியாவில் ஆலயத் திருவிழாவில் வாள்வெட்டு -மூவர் காயம்

வவுனியாவிலுள்ள ஆலயமொன்றில் திருவிழாவின்போது  இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியிலுள்ள ஆலயமொன்றிலேயே இன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை ஆலயத்தில் நின்ற சிலருக்கும் ஆலய பகுதிக்குள் நுழைந்த பிறிதொரு குழுவினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று இடம்பெற்ற ஆலய திருவிழாவில் குறித்த இருபகுதியினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மூவர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 20 பேரை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன் வாள்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *