புத்தளம் – சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ் சுவாமி ஆலய வருடாந்த மஹோறாசவத்தில் இன்று தேர்த் திருவிழா இடம்பெற்றது.
இன்று காலை 8.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று உற்சவ மூர்த்திகள் மேள வாத்தியம் முழங்க உள்வீதி வலம் வந்து இரதத்தில் எழுந்தருளியது.
அதனைத் தொடர்ந்து பஞ்ச ரதங்கள் சிலாபம் – குருநாகல் வீதி மற்றும் ஐயனார் வீதி ஊடாக ஆலயத்தை சென்றடைந்ததுடன், அங்கு அர்ச்சனத் தட்டுக்களும் வழங்கப்பட்டன.
கடந்த மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் தொடர்ந்து 28 நாட்கள் உற்சவங்கள் இடம் பெற்று வந்தது.
இன்றைய தேர்த் திருவிழாவுக்கு நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், நாளை சனிக்கிழமை தீர்த்த உற்வசவத்துடன் திருவிழா முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்