யாழில் விபத்தில் காயமடைத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகுமார் சரவணபவன் ( 32வயது ) பட்டதாரி இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

நேற்று(08) இரவு 9.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவேளை கந்தர்மடம் பகுதி அருகே உள்ள மரத்துடன் மோதுண்டு மயக்கமுற்றார்.

உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழப்புக்கு அதிவேகமாக மோட்டார் வாகனத்தை செலுத்தியமையே காரணம் என சட்ட மருத்துவ அதிகாரி நமவசிவாயம் பிறேமகுமார் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *