எச்சரிக்கையை மீறி பயணித்த ஆட்டோ மீது பொலிஸார் துப்பாகிச்சூடு!

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்த ஆட்டோ மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு திஸ்ஸமகாராம – ரன்மினிதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட மோட்டார்சைக்கிள் பிரிவினர் நேற்றிரவு 09 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டியை சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும், முச்சக்கரவண்டி கட்டளையை மீறி பயணித்ததால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சம்பவத்தின் போது 17 வயதான இளைஞர் காயமடைந்துள்ளார்.

தோள்பட்டையில் காயமடைந்த நிலையில் அவர் திஸ்ஸமகாராம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *