புகையிரத ஆசன பதிவு நடைமுறையில் மாற்றம்!

புகையிரத ஆசனங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான 14 நாட்களை 30 நாட்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி ரயில்வே பொது முகாமையாளர் (வணிக) வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அதிக கோரிக்கையை கருத்திற்கொண்டு பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் புகையிரத திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) காலை 10.00 மணி முதல் இது அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *