ஜப்பானுக்கு பறக்கும் ஜனாதிபதி ரணில்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *