
கொழும்பு, செப் 10
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் இன்று நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் சமந்தா பவர் ஆராயவுள்ளார்.
இதேவேளை, சமந்தா பவர் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.