
வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டின் தூதரக வலையமைப்பு தொடர்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பாவிலும் ஏனைய நாடுகளிலும் இயங்கிவரும் பல நோர்வே தூதரகங்களை நிறுவுவது குறித்தும் நோர்வே வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் மாலைதீவு தொடர்பான பொறுப்புகள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,