முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர் திருவிழா

முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர் திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது

பச்சை சாத்திய விநாயகர் பெருமான் பிரதான தேரிலே பவனி வர அதன் பின் சிவபெருமான் உடைய தேரும்இ முன்றாவது தேரில் முருகப்பெருமானும் என முத்தேர் பவனி ஆலய வெளி வீதியில்ப இடம்பெற்றது.

ஆண்களும் பெண்களுமாக வடம்பிடித்து இழுக்க பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதோடு பறவைக்காவடி ,பால்காவடி .பாற்செம்பு கற்பூரச்சட்டி என பலவகையானநேர்த்திக்கடன்களும் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை நேற்று சப்பறத்திருவிழா இடம்பெற்றதுடன் இன்று சமுத்திரத் தீர்த்தம் இடம்பெற்று நாளை பூங்காவனத்துட ன் திருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *