இந்திய முதலீடுகளுக்கு இடையூறா? ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!

இந்திய முதலீடுகள் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறான சுற்றறிக்கைகளை உடனடியாக மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்திய முதலீட்டு ஒத்துழைப்பின் அடிப்படையில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பும் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போதே இந்திய முதலீடுகளின் கீழ் இலங்கையில் பல திட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

முன்னைய அரசாங்கங்களினால் அவ்வப்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் உள்ள ஏற்பாடுகள் அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பின் அவற்றைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விக்ரமசிங்க விளக்கினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *