பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ரியூப் தமிழ் ஊடக நிறுவனப் பணியாளர்களான டிவனியா மற்றும் விமல்ராஜ் ஆகியோருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்று நேற்றையதினம் மாலை பிணை அனுமதி வழங்கியது.
இவர்கள் இருவரும் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி யாழில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 17 மாதங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு ஊடகவியலாளர்களையும் இருவரையும் 05 லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
அத்துடன் இருவரும் வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்