தீக்காயங்களுக்கு உள்ளாகி மனைவி உயிரிழப்பு- கணவன் கைது

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரை பருத்தித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற  இந்த சம்பவத்தில் பரமநாதன் சசிகலா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 13ம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் தகராறு புரிந்துள்ளார்.

இதன்போது மனைவி, தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய வேளையில், கணவன் தன்னிடமிருந்த லைட்டர் மூலம் மனைவிக்கு தீ வைத்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் கணவனை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *