எலிசபெத் மறைவு: நாடு முழுவதும் நாளை துக்கதினம் – மத்திய அரசு

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மறைவை முன்னிட்டு இந்தியா முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்த இரண்டாவது எலிசபெத், உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் அரச முறை துக்க தினத்தை முன்னிட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *