கேகாலையில் கோர விபத்து: மூவர் பலி

கேகாலை, செப். 10: கேகாலையில் நேற்றுநள்ளிரவு நடந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதியின் ரன்வல பகுதியில் வேன் ஒன்றுடன், மூன்று உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வேனை செலுத்தி சென்றவர், தூக்கக்கலக்கத்தில் மூன்று உந்துருகளையும் மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், வேனை செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *