உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்

வவுனியா- ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து, 5 வயது சிறுவன் ஒருவன்  உயிரிழந்துள்ளார்.

ஓமந்தை- பாலமோட்டை பகுதியிலுள்ள காணியொன்றினை உழவியந்திரத்தின்  ஊடாக பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, வாடகைக்கு அமர்த்தப்பட்ட குறித்த உழவியந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும் அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி, நிலத்தினை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது இரு சிறுவர்களில் ஒருவர், திடீரென கீழே தவறிவீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்துள்ளனர். எனினும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது 5) என்ற சிறுவனே  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *