போசாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
சிறுவர் மற்றும் தாய்மார்களுடைய குறைபோசனை பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போசாக்கு குறைப்பாட்டின் காரணமாக தாய்மார்கள் குருதிச்சோகையினால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான திரிபோஷா உணவு இடைநிறுத்தப்படுள்ளது.
ஆகவே திரிபோஷா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், கர்ப்பிணித் தாய்மார்கள், பிள்ளைகள் போசனை குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றமைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும்.

மேலும் தற்போது பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணித் தாய்மார்கள் குருதிச்சோகை நோயினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிள்ளைகளின் வளர்ச்சி வீதம் குறைவடைகிறது. இந்த நிலை குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.
அதேபோன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இலவசமாக செய்யப்பட்ட குருதிப் பரிசோதனை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
அத்துடன் குடும்பநல உத்தியோகத்தர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆகவே மேற்குறிப்பிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு வழக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்