57 இலட்சம் பேருக்கு ஒருவேளை உணவை கூட பெறமுடியாத நிலை

கொழும்பு, செப் 10

கொழும்பில் உணவு பணவீக்கம் 80 வீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் கடந்த மே மாதம் 58 வீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதம் 75.8 வீதமாக அிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண்னில் பதிவாகியுள்ளது.

இதனிடையே இலங்கையில் சுமார் 57 இலட்சம் பேருக்கு போதுமான ஒரு வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதாக உலக உணவுத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *