மாவீரர் வாரம் ஆரம்பம்- வவுனியாவில் விசேட பாதுகாப்பு கடமையில் பொலிஸார்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது.

இந்நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி, வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின் விண்ணப்பத்திற்கமைய மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு, வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *