
1.5 மில்லியன் Pfizer கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இன்று (22) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட இத்தடுப்பூசி டோஸ்கள், எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
நாட்டின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமைய, மூன்றாவது டோஸாக (Booster) இவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
