தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளரும் சட்டத்தரனியுமான காண்டீபனும் நானும் மகசின் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை பார்வையிட வந்திருந்தோம் இங்கு உண்ணாவிரதம் இருக்கின்ற கைதிகளில் 3 நபரை சந்தித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்து உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கின்ற கைதிகள் சிறையிலே வாடிக்கொண்டிருக்கிறார்கள் .இவர்கள் தமிழர்களாக இருக்கின்றதால் தான் அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என நாங்கள் கருதுகின்றோம். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதிமன்றத்திலே முற்படுத்தி அவர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கின்றது.
அவர்கள் உடல் ரீதியாக மிகவும் பலவீனம் அடைந்துள்ளார்கள்.இந்த பயங்கரவாத சட்டமானது கொடிய சட்டமாக இருக்கின்றது.இலங்கை அரசங்கமிந்த சட்டத்திலே திருத்தங்களைக் கொண்டு வந்துளோம் என சர்வதேச சமூகத்திற்கு கூறிக்கொண்டு இருந்தாலும் கூட எந்தக் குற்றங்களும் செய்யாமல் வெறுமனே இந்த அரச புலனாய்வு பிரிவினருடைய திட்டமிட்ட சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு மிக மோசமான சித்திரவதைக்கு பிற்பாடு விசாரணை இல்லாமல் அவர்கள் அடைத்து வைக்கப்ட்டு இருக்கிறார்கள் என்றால் சட்டத்தின் படி ஆட்சி நிகழுகின்றதா ? என்ற கேள்வி இருக்கின்றது.
கடந்த 3,4 வருடங்களுக்குள் கைது செய்யப்பட்டவர்களை அவ்வப்போது சிலரை விடுவிப்பதன் ஊடாக அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஒரு பொய்யான தோற்றப்பாடினை இந்த அரசாங்கம் உலகிற்கு காட்டிக்கொண்டிருக்கிறது. இதில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தோடு முண்டுகொடுத்துக்கொண்டு இந்த கைதிகள் தொடர்ந்து சிறையில் இருப்பதற்கு துணை புரிகின்றார்கள் என்ற காரணத்தினால் எங்களுடைய முயற்சி வெற்றி அளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.எனவே மக்கள் இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
பிற செய்திகள்