
கொழும்பு,செப் 10
மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Aussee Oats Milling PVT LTD எனப்படும் உணவு உற்பத்தித் தொழிற்சாலையைப் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ‘இவ்வாறான தொழிற்சாலைகள் மூலம் அலங்கார மீன் வளர்ப்பினை விருத்தி செய்யும் வகையில், மீன் உணவுகள் புதிய முறையில் உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம், அலங்கார மீன் வளர்ப்பு விருத்தியடையும்’ என்றார்.