யாழில், உறவுகளுடன் உறவாடும் உணர்வு மிக்க கண்ணீர்ப்பயண நிகழ்வு!

கடந்த 13 முதல் 27 ஆண்டுகளாகச் சிறைச்சாலையில் வாடும் உறவுகளுடன் உறவாடும் உணர்வு மிக்க கண்ணீர்ப்பயணத்தின் “உறவுகளுக்கு கரம்கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்” என்னும் தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டது.

யாழில், இருந்து கொழும்பு மகஜின் சிறைச்சாலை வரை உறவுகளுடன் உறவாடும் வாகனப்பயணம் இன்று யாழ். இராஜாவின் தோட்டத்தில் அமைந்துள்ள யாழ் ஊடக அமையத்தில் இருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த பயணம் யாழ். மாவட்ட காணமால் ஆக்கப்பட்டவர்களின் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்.ம. தலைமையில் நடைபெற்றது.

இவ் உறவினர்களை அனுப்பிவைக்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ஒய்வுபெற்ற நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக்கட்சியின் உறுப்பினர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர பதில் முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடமாகாண சபையின் அமைச்சரும் ஆகிய பொ.ஜங்கரநேசன் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானதலைருவரும் ஆறுதிருமுருகன், யாழ். மறைமாவட்ட பங்குகுருமுதல்வர் ஜெபரட்ணம், உள்ளிட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த வாகனப்பயணம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறைக்கைதிகளாக நீண்டகாலமாக இருந்துவருகின்றவர்களைதத்தமது குடும்ப உறவுகள் சந்திப்பதற்கான எற்பாட்டினை மகஜின் சிறைச்சாலை முன்னெத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *