தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்- வேலன் சுவாமிகள் கோரிக்கை!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகளுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தங்களுடைய பயணத்தினை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவர்கள் தங்குடைய உறவுகளை கொழும்பு சிறைச்சாலையில் அவர்களை நேரடியாக சந்தித்து உறவாடுவதோடு மட்டுமன்றி அவர்களின் விடுதலைக்கான ஒரு விழிப்புணர்வு பயணமாக இந்த பயணத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் எந்தவிதமான விசாரணைகளும் இல்லாமல் அவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கபப்ட்டிருப்பது என்பது கண்டிக்கக் கூடிய விடயமாகும் .இன்றைய கால கட்டத்திலே தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி முற்று முழுதாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ் மக்கள் சார்பிலே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வலியுறுத்தி நிற்கின்றது.

மிக நீண்ட காலமாக தவித்துக்கொண்டிக்கின்ற,மிக வேதனையான சூழலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் .இதனை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் .அது மட்டுமல்ல வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி ,காணி விவகாரம் என பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் ஆணி வேராக தமிழ் தேசிய அரசியல் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் .இது தேசியம் ,தாயகம் ,சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் முழுமையாக அமைய வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான வேண்டுகோளாகும்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *