தற்கொலைகளால் வருடாந்தம் 3200 பேர் இறப்பதாக தகவல்

கொழும்பு,செப் 10

நாட்டில் தற்கொலைகளால் வருடாந்தம் 3 ஆயிரத்து 200 பேர் இறப்பதாக தேசிய உளவியல் சுகாதார ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது.

தற்கொலை எதிர்ப்பு தினமான இன்று, தேசிய உளவியல் சுகாதார ஆய்வுக்கூடத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் அரோஷ விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்

செயல் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தல் என்பது இந்த வருடத்தின் உலக தற்கொலை தடுப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.

வருடாந்தம், சுமார் 3 இலட்சத்து 3 ஆயிரம் பேர் தமது வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வதாகவும், மேலும் பலர் அவ்வாறான சிந்தனைகளுடன் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே அதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் தமது உயிரை மாய்த்துக் கொள்வோரின் வீதம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *